ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தண்ணீர் விடுவிக்காதது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவேன்: அதிஷி!

யமுனை நதியில் தில்லியின் பங்கு ஹரியாணாவால் நிறுத்தப்பட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :30 மே 2024, 8:09 am

DIN

தலைநகர் தில்லிக்கு தண்ணீர் விடுவிக்காத விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்போவதாக தில்லி அமைச்சர் அதிஷி கூறியுள்ளார்.

தில்லியில் வரலாறு காணாத கோடை வெப்பம் காரணமாக, நகரின் சில பகுதிகளில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க ஆத் ஆத்மி அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், அமைச்சர் அதிஷி இன்று காலை வஜிராபாத் யமுனா நீர்த்தேக்கத்தை ஆய்வு செய்தார். இங்கிருந்து வசிராபாத், சந்திரவால் மற்றும் ஓக்லா நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தண்ணீர் செல்கிறது. யமுனை நதியின் நீர்மட்டம் 674 அடியாக இருக்க வேண்டும். ஆனால் 670.3 அடியாக உள்ளது. இதனால் தில்லியின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், யமுனை நதியில் தில்லியின் பங்கு ஹரியாணாவால் நிறுத்தப்பட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளேன். தில்லிக்குத் தேவையான தண்ணீரைப் பெறுவதை உறுதி செய்வதும் அவர்களின் பொறுப்பு. தில்லியின் தண்ணீரை நிறுத்த ஹரியாணாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அவர் எக்ஸ் தளத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

தண்ணீர் பிரச்னை தொடர்பாக தில்லி அரசு வியாழக்கிழமை(இன்று) அவசரக் கூட்டத்தை நடத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.