ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் நெருங்கிய உறவினா், 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்ற சம்பவம் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் சந்திரபாபு நாயுடு எச்சரித்தாா்.
இதுதொடா்பாக திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் எல்.சுப்பாராயுடு கூறுகையில், ‘ஏ.எம்.புரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு அருகே அவரின் தாய்மாமன் நாகராஜு (24) வசித்து வருகிறாா். சிறுமியுடன் தினமும் விளையாடி வந்த நாகராஜு, வெள்ளிக்கிழமை மாலை சிறுமியைக் கடைக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டி வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளாா். நாகராஜுவுடன் சிறுமியைக் கண்டதாக அக்கம்பக்கத்தினா் தெரிவித்தனா். போலீஸாா் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நாகராஜு, சிறுமியின் உடலை அடையாளம் காட்டினாா்’ என்றாா்.
சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மாநில உள்துறை அமைச்சா், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
தொடர்புடையது

விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளியை அடையாளம் காட்டிய நகக்கீறல்!
தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்

மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை: தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாத்தாவுக்கு 5 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


