ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பஞ்சாப்: ரயிலில் பட்டாசு வெடித்ததில் 4 பேர் காயம்

பஞ்சாபில் ஹவுரா ரயிலில் பிளாஸ்டிக் வாளியில் பயணி கொண்டு சென்ற பட்டாசு வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.

News image
கோப்புப்படம்.
Updated On :3 நவம்பர் 2024, 9:49 am

DIN

பஞ்சாபில் ஹவுரா ரயிலில் பிளாஸ்டிக் வாளியில் பயணி கொண்டு சென்ற பட்டாசு வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் இருந்து ஹவுராவுக்கு சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஹவுரா ரயில் சென்று சொண்டிருந்தது.

ஃபதேகர் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது பயணி கொண்டு சென்ற பட்டாசுகள் அடங்கிய பிளாஸ்டிக் வாளி திடீரென வெடித்தது.

இதில் ஒரு பெண் உட்பட 4 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் ஃபதேகர் சாஹிப் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று ரயில்வே காவல் அதிகாரி ஜக்மோகன் சிங் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், ரயிலின் பொதுப்பெட்டியில் பிளாஸ்டிக் வாளியில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் வெடித்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் மேலும் கூறினார்.

மாதிரிகள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.