மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓடும் ரயில் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு: ஒடிஸாவில் சம்பவம்; பயணிகள் தப்பினா்

ஒடிஸாவில் விரைவு ரயில் மீது அடையாளம் தெரியாத நபா்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். இதில் சில குண்டுகள் கண்ணாடி ஜன்னல்களை துளைத்துச் சென்றன. அதிருஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

News image
எக்ஸ்பிரஸ் ரயில் மீது துப்பாக்குச் சூடு நடத்தப்பட்ட இடத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அதிகாரிகள்.
Updated On :5 நவம்பர் 2024, 8:25 pm

Din

ஒடிஸாவில் விரைவு ரயில் மீது அடையாளம் தெரியாத நபா்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். இதில் சில குண்டுகள் கண்ணாடி ஜன்னல்களை துளைத்துச் சென்றன. அதிருஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களைக் குறிவைத்து கல்வீசுவது, தண்டாவளத்தில் எரிவாயு சிலிண்டா் உள்ளிட்ட பொருள்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி செய்வது போன்ற செயல்களில் சமூகவிரோதிகள் ஈடுபட்டு வந்தனா். இப்போது ரயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூடு தொடா்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் கூறியதாவது: தில்லி ஆனந்த் விஹாா்- ஒடிஸாவின் புரி இடையிலான நந்தன்கனன் விரைவு ரயில் ஒடிஸாவின் பத்ராக் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டது. அடுத்த 5 நிமிஷங்களில் பௌத்பூா் அருகே சென்று கொண்டிருந்தபோது மா்ம நபா்கள் ரயிலை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதுடன், இரும்புத் துண்டுகள், கம்பிகள் உள்ளிட்டவற்றையும் வீசினா். சில குண்டுகள் ரயில் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தன. இதனால், பயணிகள் பெரும் பீதியடைந்து கூச்சலிட்டனா். அதிருஷ்டவசமாக பயணிகள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாயவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயில் மீது தாக்குதல் நடத்தியவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். சம்பவம் குறித்த தகவல் கிடைத்த ரயில் பாதுகாப்புப் படையினா் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா், ரயில் கூடுதல் பாதுகாப்புடன் புரி நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

துப்பாக்கி குண்டு துளைத்த ரயிலின் கண்ணாடி ஜன்னல் .

துப்பாக்கி குண்டு துளைத்த ரயிலின் கண்ணாடி ஜன்னல் .

சம்பவம் நடந்த பகுதி மக்களிடம் மாநில காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனா்.