ஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வுமுதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

பி.எம். 2.5 நுண்துகளால் குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்பு? - ஆய்வில் தகவல்

காற்றில் உள்ள பி.எம். 2.5 நுண் துகள்களால் குழந்தைகளின் கற்றல் திறனும் நினைவாற்றலும் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வு கூறுகிறது.

air pollution

தில்லியில் காற்று மாசு

Published On :5 நவம்பர் 2024, 3:29 pm IST

காற்றில் உள்ள பி.எம். 2.5 நுண் துகள்களால் குழந்தைகளின் கற்றல் திறனும் நினைவாற்றலும் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வு கூறுகிறது.

நாட்டில் தில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாகனங்களின் பெருக்கத்தினாலும், தொழிற்சாலை புகை மற்றும் கழிவுகள் உள்ளிட்ட காரணங்களினால் காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது.

அந்தவகையில், காற்றில் உள்ள பி.எம். 2.5 நுண்துகள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துபவை. காற்று மாசு அளவை இதைக் கொண்டுதான் கணக்கிடுகின்றனர்.

பி.எம். 2.5 என்பது நுண்துகளின் விட்டம் 2.5 மைக்ரான் அல்லது அதைவிடக் குறைவாக இருப்பது.

நெருப்பில் இருந்து வரும் புகை, குறிப்பாக மரக்கட்டைகளை எரிப்பது, கார் உள்ளிட்ட வாகனங்களில் இருந்து வரும் புகை அதிகரித்தால் காற்றில் பி.எம். 2.5 துகள்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

பி.எம். 2.5 அளவு அதிகரிப்பதால் இருமல், மூச்சுத்திணறல், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு அதிகபட்சமாக ஆஸ்துமா, மாரடைப்பு பாதிப்பு உருவாகலாம்.

இந்நிலையில் பி.எம். 2.5 துகள் அளவு அதிகமானால் குழந்தைகளிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பி.எம். 2.5 துகளில் உள்ள 15 ரசாயனங்களில் அம்மோனியம் நைட்ரேட் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமான வேதிப்பொருள் என்று கூறியுள்ளது.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், அங்குள்ள 9-11 வயதுள்ள 8,600 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தியது. இதில் காற்றில் உள்ள அம்மனோனியம் நைட்ரேட் குழந்தைகளிடையே கற்றல் திறன் மற்றும் நினைவாற்றலை பாதிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், விவசாயக் கழிவுகளை எரிக்கப்படும்போது வெளியாகும் அம்மோனியா வாயு, வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை உள்ளிட்டவை காற்றில் பி.எம். 2.5 அளவை அதிகரிப்பதாகவும் இதுகுறித்து பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியது.

முன்னதாக, தில்லியில் தீபாவளி அன்று இரவில், பிஎம் 2.5 அளவு இரு மடங்கு அதிகரித்தது. 2022 மற்றும் 2023-இல் காணப்பட்டதைவிட இது 13 சதவீதம் அதிகமாகும். சென்னையிலும் தீபாவளி அன்று நள்ளிரவு முதல் மறுநாள் வரை காற்று மாசு அதிகரித்துக் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.