சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

மிகப்பெரிய பலம்.. கட்சித் தொண்டர்களுக்கு ஆம் ஆத்மி வெளியிட்ட விடியோ பதிவு!

ஆம் ஆத்மியின் மிகப்பெரிய பலம் கட்சித் தொண்டர்கள்..

News image

அரவிந்த் கேஜரிவால்

Updated On :8 நவம்பர் 2024, 12:55 pm IST

கட்சியின் மிகப்பெரிய பலம் தொழிலாளர்கள்தான் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தலைநகரில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தநிலையில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற ஆம் ஆத்மி கடுமையாக உழைத்து வருகிறது.

தில்லியின் கலால் கொள்கை முறைகேடு அமல்படுத்தியது தொடர்பாக நடைபெற்ற ஊழல் காரணமாக அமலாக்கத்துறை கேஜரிவாலை கைது செய்து, 5 மாதங்களுக்குப் பின்னர் விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, முதல்வராக இருந்த கேஜரிவால் பதவி விலகியதையடுத்து, அக்கட்சியின் அமைச்சராக இருந்த அதிஷி புதிய முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.

இதுதொடர்பாக கேஜரிவாலின் எக்ஸ் பதிவில் வெளியிட்ட விடியோ பதிவில்,

எளியவனுக்கு உதவுங்கள். நாட்டின் ஒரே நம்பிக்கை ஆம் ஆத்மி கட்சி. அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு கட்சித் தொண்டர்கள் அனைவரும் சொந்த வேலையை விட்டுவிட்டுத் தேர்தலுக்கு உழைக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான சக்திகள் சட்டப்பேரவைத் தேர்தலில் நம்மை முறியடிக்க எதையும் செய்வார்கள். ஆனால் அத்தனைய சக்திகளை வெற்றிபெற நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

உடல்நலம், கல்வி, சாலைகள் போன்றவற்றைப் பற்றிப் பேசும் இந்திய அரசியலில் ஆம் ஆத்மி ஒரு புதிய விடிவாக இருக்கும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.