கர்நாடகத்தில் மினிலாரி மீது கார் மோதிய விபத்தில் கோயிலுக்கு சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கர்நாடகத்தில் பார்கவ் கிருஷ்ணா என்பவர், தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை (நவ. 9) அதிகாலையில் மரகுட்டி அருகே காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக மினிலாரி மீது கார் மோதியுள்ளது.
இந்த விபத்தில், காரில் பயணித்த பார்கவ் (55), அவரது மனைவி சங்கீதா (45), மகன் உத்தம் ராகவன் (28), கார் ஓட்டுநர் ஆகிய நால்வரும் பலியாகினர். இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
விசாரணையில், அவர்கள் நால்வரும் கணகபுராவில் உள்ள தத்தாத்ரேயா கோயிலுக்கு சென்றிருக்கலாம் என்றும், கார் ஓட்டுநர் குறித்த விவரங்கள் மட்டும் அறியப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: பரபரப்பை ஏற்படுத்தும் டிரம்ப் - எலான் - ஸெலென்ஸ்கி உரையாடல்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மரத்தில் பைக் மோதி 2 இளைஞா்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

காவேரிப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதிய விபத்து: 3 பேர் பலி
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



