

கொழும்பு: இந்திய கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை கொழும்பு துறைமுகம் வந்தது.
இந்திய நீா்மூழ்கிக் கப்பலுக்கு, கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை கடற்படை வீரா்கள் நீா்மூழ்கிக் கப்பலின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கும், இந்திய நீர்மூழ்கிக் கப்பலின் குழுவினருக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே கூடைப்பந்து போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ரஷிய தலைநகரை வட்டமடித்த உக்ரைன் டிரோன்களால் பரபரப்பு!
உள்நாட்டு கல்வாரி வகை டீசல்-மின்சார நீா்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வேலா கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் 25 ஆம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இதன் கமாண்டராக கபில் சா்மா பொறுப்பு வகிக்கிறாா்.
நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா கொழும்பு வருகை இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது. மூன்று நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஐஎன்எஸ் வேலா புதன்கிழமை(நவ.13) கொழும்பிலிருந்து புறப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.