ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார்.
ராஞ்சி தொகுதியில் தொடர்ந்து 6 முறை பாஜக வெற்றி பெற்ற நிலையில், இம்முறை மாநில ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் பிரதமர் மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவ. 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது.
இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 3வது முறையாக வருகைபுரிந்துள்ளார்.
இன்று மட்டும் இரு இடங்களில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்
அப்போது பேசிய அவர், ஓபிசி பிரிவினரிடையே விரிசலை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் துடிப்பதாகவும், இதனால், அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் எனவும் குறிப்பிட்டார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் தேர்தல் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ராஞ்சியில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார்.
அப்போது சாலையின் இருபுறங்களிலும் மக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பிரதமர் மோடியின் உருவப் படங்கள் மற்றும் பாஜக கொடியை அசைத்து மக்கள் வரவேற்றனர்.
ராஞ்சி தொகுதியில் போட்டியிடும் சி.பி. சிங் பிரதமர் மோடியுடன் வாகனத்தில் இருந்தார். இவர் 6 முறை இந்தத் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர். முன்னாள் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இதையும் படிக்க | ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்: பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பிரிக்ஸ் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

விமான நிலையத்தில் காத்திருந்தாரா பிரதமர் மோடி? யாருக்காக??

அமோனியா வாயு கசிவு விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

வாழ்க்கைக்கு இன்றியமையாதது யோகா: பிரதமர் மோடி பேச்சு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



