ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார்.
ராஞ்சி தொகுதியில் தொடர்ந்து 6 முறை பாஜக வெற்றி பெற்ற நிலையில், இம்முறை மாநில ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் பிரதமர் மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவ. 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது.
இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 3வது முறையாக வருகைபுரிந்துள்ளார்.
இன்று மட்டும் இரு இடங்களில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்
அப்போது பேசிய அவர், ஓபிசி பிரிவினரிடையே விரிசலை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் துடிப்பதாகவும், இதனால், அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் எனவும் குறிப்பிட்டார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் தேர்தல் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ராஞ்சியில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார்.
அப்போது சாலையின் இருபுறங்களிலும் மக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பிரதமர் மோடியின் உருவப் படங்கள் மற்றும் பாஜக கொடியை அசைத்து மக்கள் வரவேற்றனர்.
ராஞ்சி தொகுதியில் போட்டியிடும் சி.பி. சிங் பிரதமர் மோடியுடன் வாகனத்தில் இருந்தார். இவர் 6 முறை இந்தத் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர். முன்னாள் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இதையும் படிக்க | ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்: பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி
தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து! நிவாரணம் அறிவித்த பிரதமர்

தாமரை எங்கும் மலரும்: பிரதமர் மோடி
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

