
மகாராஷ்டிரத்தில் நவ. 20-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. 288 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில் காங்கிரஸ்-சிவசேனை (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இடம்பெற்ற ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணிக்கும், பாஜக-முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் ‘மகாயுதி’ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், ‘மகாராஷ்டிராநாமா’ என்ற பெயரிலான காங்கிரஸ் தலைமையிலான ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று(நவ. 10) மும்பையில் வெளியிட்டார். அதில் முக்கிய வாக்குறுதியாக, பெண்களுக்கு ரூ.3,000 மாதாந்திர ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:
மஹாலக்ஷ்மி திடத்தின்கீழ், மகளிருக்கு ரூ.3,000 மாதாந்திர ஊக்கத் தொகை, அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம்
விவசாயிகளுக்கு தலா ரூ. 50,000 (உரிய தவணையில் முறையாக கடனைத் திருப்பிச் செலுத்துவோருக்கு)
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 50 சதவிகித இடஒதுக்கீட்டு முறை நீக்கப்படும். இதன்மூலம், நலிவுற்ற சமூகப் பிரிவினருக்கு அதிக வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்
வேலை தேடும் இளைஞர்களுக்கு ரூ. 4,000 மாதாந்திர உதவித் தொகை
ரூ. 25 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.