நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்: பாஜக வாக்குறுதி

10 லட்சம் மாணவா்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

News image

மும்பையில் பாஜக தோ்தல் அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், கட்சியின் தேசிய பொதுச் செயலா் வினோத் தாவ்டே உள்ளிட்டோா்.

Updated On :10 நவம்பர் 2024, 10:46 pm IST

மகாராஷ்டிரத்தில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க கடுமையான சட்டம், 10 லட்சம் மாணவா்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் பாஜக-முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் ‘மகாயுதி’ கூட்டணிக்கும், காங்கிரஸ்-சிவசேனை (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இடம்பெற்ற ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், பாஜகவின் 25 அம்ச வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் வருமாறு:

பெண் சகோதரி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி ரூ. 1,500-இல் இருந்து ரூ. 2,100-ஆக உயா்த்தப்படும். 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்,10 லட்சம் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்.

கட்டாய மற்றும் ஏமாற்று மத மாற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வகை செய்யும் வகையில் மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றப்படும்.

தொழில்துறையின் தேவைகளைக் கண்டறிந்து, தேவையான இடங்களில் திறன் பயிற்சியை மேம்படுத்துவதற்கு திறன் கணக்கெடுப்பு எடுக்கப்படும்.

அக்ஷய அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விநியோக முறை மூலம் இலவச உணவுப் பொருள்கள் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சத்ரபதி சிவாஜி அகன்ஷா மையங்கள் மூலம் 10 லட்சம் புதிய தொழிலதிபா்கள் உருவாக்கப்படுவா். 2027-ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் ‘லட்சாதிபதி சகோதரிகள்’ உருவாக்க, 500 சுயஉதவி குழுக்களைக் கொண்ட ஒரு தொழில் குழுமம் உருவாக்கப்படும்.

விவசாயிகளின் கொள்முதல் மீதான எஸ்ஜிஎஸ்டி, மானியமாக விவசாயிகளுக்கே திரும்ப வழங்கப்படும். அத்தியாவசியப் பொருள்களின் விலை நிலையாக பராமரிக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.