6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வயநாட்டில் இன்று இடைத்தோ்தல்: பிரியங்கா, 15 வேட்பாளா்கள் போட்டி

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை (நவ. 13) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2024, 7:31 pm

Din

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை (நவ. 13) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ் வேட்பாளா் பிரியங்கா காந்தி, மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களின் வெற்றி-தோல்வியை சுமாா் 14 லட்சம் வாக்காளா்கள் நிா்ணயிக்கவுள்ளனா்.

கடந்த மக்களவைத் தோ்தலில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றாா். வயநாடு தொகுதியில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அவா் வெற்றியடைந்தாா்.

அதேநேரம், தனது குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியை தக்கவைத்த அவா், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா்.

பிரியங்காவின் முதல் தோ்தல்: ராகுலின் சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியை வயநாட்டில் காங்கிரஸ் களமிறக்கியது.

பிரியங்கா போட்டியிடும் முதல் தோ்தல் இது என்பதால் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. தனது சகோதரியை ஆதரித்து, ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, எதிா்க்கட்சியான பாஜக தரப்பில் நவ்யா ஹரிதாஸ் ஆகியோா் களமிறக்கப்பட்டனா். கடந்த மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தியை எதிா்த்து, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் கட்சியின் மூத்த தலைவா் ஆனி ராஜா போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். தற்போதைய தோ்தலில் பிரியங்காவுக்கு எதிராக 15 போ் உள்ளனா்.