தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

வயநாடு இடைத்தேர்தல்: 8 மணி நிலவரம்!

வயநாடு இடைத்தேர்தலுக்கான 8 மணி வாக்குப்பதிவு நிலவரம்..

Published On :

கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

வயநாடு தொகுதியில் 14 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள 1,354 வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் காலை முதலே வந்து வாக்களிக்கத் தொடங்கினர்.

வயநாடு மக்களவை மற்றும் சேலக்கரை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வயநாடு தொகுதியில் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, கல்பெட்டா ஆகிய ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கோழிக்கோடு மாவட்டத்தில் திருவம்பாடி, மலப்புரம் மாவட்டத்தில் ஏரநாடு, நிலம்பூர் மற்றும் வண்டூர் ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

​​ஒரு மணிநேர வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதி, கேரளத்தின் சேலக்கரை சட்டப்பேரவைத் தொகுதிகள் முறையே 6.96 மற்றும் 7.2 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் வெற்றிபெற்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதையடுத்து, வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்தார்.

வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி வயநாட்டில் 2,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.