கோவிட்-19 பெருந்தொற்று காலத்தின்போது, டொமினிகா நாட்டுக்கு இந்தியா உதவியதால், பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதான டொமினிகா விருது வழங்கப்படவுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டிருந்த 2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில், பிப்ரவரி மாதத்தில் டொமினிகா நாட்டுக்கு 70,000 டோஸ் அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசியை பிரதமர் மோடி வழங்கினார். இதன்மூலம், இந்தியா அளித்த தடுப்பூசியை, டொமினிகா தனது அண்டை நாடுகளுக்கும் அளித்து உதவியது.
இந்த நிலையில், தக்க சமயத்தில் டொமினிகா நாட்டுக்கு இந்தியா உதவியதையடுத்து, பிரதமர் மோடியை கௌரவிக்கும் விதமாக, அவருக்கு டொமினிகா நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதான டொமினிகா விருதை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்க: நெருப்பாக இருக்கிறதா சூர்யாவின் கங்குவா? திரை விமர்சனம்!
இந்த விருதை, கயானாவின் ஜார்ஜ்டவுனில் நவம்பர் 19 முதல் 21 வரையில் நடைபெறும் இந்தியா - கரிகாம் (CARICOM - The Caribbean Community and Common Market) உச்சி மாநாட்டின்போது, பிரதமர் மோடிக்கு காமன்வெல்த் டொமினிகா தலைவர் சில்வானி பர்ட்டன் வழங்கவுள்ளார்.
இதுகுறித்து, டொமினிகா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, ``கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் டொமினிகாவுக்கு இந்தியா அளித்த ஆதரவையும், காலநிலை பின்னடைவை உருவாக்கும் முயற்சிகள், உலக அளவில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் பிரதமர் மோடியின் பங்கையும் இந்த விருது அங்கீகரிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது’’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமர் மோடிக்கு செஷல்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

வாங்கிய சர்வதேச விருதுகள்! பிரதமர் மோடி 33; நேரு 2!

பிரதமருக்கு ஸ்லோவாக்கியாவின் உயரிய விருது; அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை: ஆதித்யநாத்

மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் மிக உயரிய விருது
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



