ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ஹெலிகாப்டரில் சோதனை

மகாராஷ்டிரத்தில் பிரசாரத்துக்கு சென்றபோது மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

News image
அமித் ஷாவின் ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள்.
Updated On :15 நவம்பர் 2024, 10:49 am

DIN

மகாராஷ்டிரத்தில் பிரசாரத்துக்கு சென்றபோது மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

288 பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 நடைபெறவுள்ளது.

தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதி கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற சிவசேனை(உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்காமல் எதிா்க்கட்சித் தலைவா்களைக் குறிவைத்து தோ்தல் ஆணையம் செயல்படுவதாக காங்கிரஸ், சிவசேனை(உத்தவ் அணி) உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம, ஹிங்கோலி தொகுதியில் பிரசாரத்துக்கு சென்றபோது மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

இந்த விடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நியாயமான தேர்தலை பாஜக நம்புகிறது என்றும் தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.