ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது வழங்குவிழா - வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஸ்கின் பாண்ட்!

புது தில்லியில் வெகு சிறப்பாக நடைபெற்ற ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் நிகழ்ச்சி
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் வழங்குவிழாவில் (இடமிருந்து) குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் லட்சுமி மேனன், தலைவர் – மேலாண் இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா, விருது பெற்ற (புனைவுக்காக) ஐஸ்வர்யா ஜா, இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஸ்கின் பாண்ட் பேத்தி சிருஷ்டி பாண்ட், விருது வழங்கிய சுவாமி ஸ்வரூபானந்தா, அ-புனைவுக்காக விருது பெற்ற நீரஜா சௌதுரி, ஆசிரிய குழு ஆலோசகர் பிரபு சாவ்லா, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சாந்த்வானா பட்டாச்சார்யா.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் வழங்குவிழாவில் (இடமிருந்து) குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் லட்சுமி மேனன், தலைவர் – மேலாண் இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா, விருது பெற்ற (புனைவுக்காக) ஐஸ்வர்யா ஜா, இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஸ்கின் பாண்ட் பேத்தி சிருஷ்டி பாண்ட், விருது வழங்கிய சுவாமி ஸ்வரூபானந்தா, அ-புனைவுக்காக விருது பெற்ற நீரஜா சௌதுரி, ஆசிரிய குழு ஆலோசகர் பிரபு சாவ்லா, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சாந்த்வானா பட்டாச்சார்யா.EPS
Published on
Updated on
1 min read

தி நியூ இந்தியன் குழுமத்தின் சார்பில் நிறுவனர் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் இன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.

விழாவின் தொடக்கமாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் - மேலாண் இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா வரவேற்றுப் பேசினார்.

தொடர்ந்து விழாவின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சின்மயா மிஷன் சா்வதேசத் தலைவா் பூஜ்ய சுவாமி ஸ்வரூபானந்தாஜி சிறப்புரையாற்றினார்.

விருது பெறுவோர் தெரிவு செய்யப்பட்ட முறை பற்றி விளக்கிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சாந்த்வானா பட்டாச்சார்யா, விருது பெறுவோர் பெயர்களை அறிவித்தார்.

அ-புனைவுக்கான பிரிவில் ‘ஹவ் பிரைம் மினிஸ்டா்ஸ் டிசைட்’ நூலுக்காக எழுத்தாளர் நீரஜா செளதுரிக்கு விருது வழங்கப்பட்டது.

புனைவுக்கான பிரிவில் ‘தி சென்ட் ஆஃப் ஃபாலன் ஸ்டாா்ஸ்’ நூலை எழுதிய ஐஸ்வா்யா ஜாவுக்கு விருது வழங்கப்பட்டது.

இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்-க்கு வழங்கப்பட்டது.

விழாவில் பங்கேற்க வர இயலாத நிலையில் காணொலி வாயிலாகப் பேசினார் ரஸ்கின் பாண்ட். தொடர்ந்து, விருதினை அவருடைய பேத்தியான சிருஷ்டி பாண்ட் பெற்றுக்கொண்டார்.

விருதுகள் பெற்றவர்கள் ஏற்புரை நிகழ்த்தினர்.

நிறைவில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைமைச் செயல் அலுவலர் லட்சுமி மேனன் நன்றி கூறினார்.

எழுத்துலகில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துவரும் படைப்பாளிகளைப் பெருமைப்படுத்தும் வகையில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (டிஎன்ஐஇ) குழுமம், ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com