இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆகக் குறைக்க வேண்டும்! - தெலங்கானா முதல்வர்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆகக் குறைக்க வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

News image
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
Updated On :15 நவம்பர் 2024, 7:50 am

DIN

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆகக் குறைக்க வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

தெலங்கானாவில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு குழந்தைகள் பங்கேற்ற மாதிரி சட்டப்பேரவை நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக எஸ்சிஇஆர்டி வளாகத்தில் போலி சட்டப்பேரவை அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதில் சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மாதிரி பேரவையில் மாணவர்களிடையே உரையாற்றிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, சட்டப்பேரவை செயல்பாட்டில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் குறித்த முக்கியத்துவத்தையும் பேரவைத் தலைவரின் செயல்பாடுகள் குறித்த விளக்கத்தையும் அளித்தார். சட்டப்பேரவை அமர்வு ஒழுங்காகவும் பயனுள்ளதாகவும் இருப்பதில் பேரவைத் தலைவரின் பங்கு முக்கியமானது என்றார்.

வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வயதைக் குறைக்க வேண்டும். அதன்படி தற்போதுள்ள 25 வயதிலிருந்து அதனை 21 ஆகக் குறைக்க வேண்டும், இது ஆட்சி நிர்வாகத்தில் இளைஞர்களின் பங்களிப்புக்கு உதவும் என்றார்.

மேலும் குழந்தைகள் மாதிரி பேரவையை உருவாக்கிய அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் இது இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் என்றார்.

இறுதியாக, மாணவர்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய முதல்வர், அரசியல் விழிப்புணர்வும் ஈடுபாடும் கொண்ட தலைமுறையை உருவாக்க இதுபோன்ற திட்டங்கள் உதவுவதாகக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.