ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ராகுல், இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என பொய்களைப் பரப்பும் மோடி: பிரியங்கா

மோடியும், அமித் ஷாவும் பொய்களைப் பரப்புகின்றனர்..

News image
கோயில் நகரமான சீரடியில் பிரியங்கா
Updated On :16 நவம்பர் 2024, 11:28 am

DIN

இடஒதுக்கீடுக்கு ராகுல் காந்தி எதிரானவர் எனப் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பொய்களைப் பரப்புவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரத்தின் அஹில்யாநகர் மாவட்டத்தில் உள்ள கோயில் நகரமான சீரடியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரியங்கா உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,

மாநிலத்தில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் பறிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புவதால் மோடியும், அமித் ஷாவும் பயப்படுகிறார்கள்.

நாங்கள் அனைவரும் மகாராஷ்டிரத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம். ஆனால் இந்த மண்ணில் சத்ரபதி சிவாஜி மகாராஜா அவமதிக்கப்படுகிறார். மக்களான நீங்களும் அவமதிக்கப்படுகிறீர்கள்.

முன்னதாக சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலைக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார், ஆனால் அதற்கான பணிகளை அவரே நிறுத்தினார். நாடாளுமன்றத்திற்கு வெளியே இருந்த சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை அகற்றப்பட்டது. சிந்துதுர்க்கில் நிறுவப்பட்ட சிலை, அதன் கட்டுமானத்தில் ஊழல் நடந்ததால் இடிந்து விழுந்தது. எனவே அவர் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்.

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பு நீக்கப்படும் என்பதைப் பகிரங்கமாக அறிவிக்குமாறு பிரதமர் மோடிக்கு அவர் சவால் விடுத்தார்.

மேலும் எனது சகோதரர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர் என்று ஒவ்வொரு மேடையிலும் பிரதமர் மோடி பொய்களைப் பரப்பி வருகிறார். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் அவமதிப்பைக் காங்கிரஸ் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.