சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

சரியான வரலாறு கற்பிக்கப்பட்டிருந்தால், எந்த முஸ்லிமும் ஔரங்கசீப்பை நாயகனாக கருத மாட்டார்கள்: மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ்

News image

திப்பு சுல்தான் | சத்ரபதி சிவாஜி

Updated On :26 பிப்ரவரி 2026, 6:35 pm IST

பள்ளிகளில் சரியான வரலாறு கற்பிக்கப்பட்டிருந்தால், எந்த முஸ்லிமும் ஔரங்கசீப்பை ஒரு நாயகனாக கருத மாட்டார்கள் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநில பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, மாநில முதல்வர் ஃபட்னவீஸ் பேசுகையில், ’’தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் புத்தகங்களில் 17 பக்கங்கள் முகலாயர்களுக்கும், ஒரு பக்கம் மட்டுமே சத்ரபதி சிவாஜிக்கும் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இப்போது பிரதமர் மோடி அரசுதான், சத்ரபதி சிவாஜி மற்றும் மராத்திய வரலாற்றுக்கு 20 பக்கங்களை அர்ப்பணித்துள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் வரலாறு, துல்லியமாகவும் சரியாகவும் கற்பிக்கப்பட்டிருந்தால், ஒரு முஸ்லிம்கூட ஔரங்கசீப்பை ஒரு நாயகனாக கருதியிருக்க மாட்டார்கள். படையெடுப்பாளர்களை நாயகர்களைபோல கருதுபவர்களை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம். திப்பு சுல்தான், ஆங்கிலேயர்களுடன் போரிட்டிருக்கலாம். ஆனால், அவர் தனது சொந்த ராஜ்ஜியத்தை காப்பாற்றவே அவ்வாறு செய்தார். அதுமட்டுமின்றி, அவர் 75,000 இந்துக்களையும் கொன்றார்’’ என்று தெரிவித்தார்.

Summary

If history were taught accurately, no Muslim would consider Aurangzeb a hero: Fadnavis

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.