அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

சரியான வரலாறு கற்பிக்கப்பட்டிருந்தால், எந்த முஸ்லிமும் ஔரங்கசீப்பை நாயகனாக கருத மாட்டார்கள்: மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ்

News image

திப்பு சுல்தான் | சத்ரபதி சிவாஜி

Updated On :26 பிப்ரவரி 2026, 1:05 pm

பள்ளிகளில் சரியான வரலாறு கற்பிக்கப்பட்டிருந்தால், எந்த முஸ்லிமும் ஔரங்கசீப்பை ஒரு நாயகனாக கருத மாட்டார்கள் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநில பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, மாநில முதல்வர் ஃபட்னவீஸ் பேசுகையில், ’’தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் புத்தகங்களில் 17 பக்கங்கள் முகலாயர்களுக்கும், ஒரு பக்கம் மட்டுமே சத்ரபதி சிவாஜிக்கும் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இப்போது பிரதமர் மோடி அரசுதான், சத்ரபதி சிவாஜி மற்றும் மராத்திய வரலாற்றுக்கு 20 பக்கங்களை அர்ப்பணித்துள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் வரலாறு, துல்லியமாகவும் சரியாகவும் கற்பிக்கப்பட்டிருந்தால், ஒரு முஸ்லிம்கூட ஔரங்கசீப்பை ஒரு நாயகனாக கருதியிருக்க மாட்டார்கள். படையெடுப்பாளர்களை நாயகர்களைபோல கருதுபவர்களை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம். திப்பு சுல்தான், ஆங்கிலேயர்களுடன் போரிட்டிருக்கலாம். ஆனால், அவர் தனது சொந்த ராஜ்ஜியத்தை காப்பாற்றவே அவ்வாறு செய்தார். அதுமட்டுமின்றி, அவர் 75,000 இந்துக்களையும் கொன்றார்’’ என்று தெரிவித்தார்.

Summary

If history were taught accurately, no Muslim would consider Aurangzeb a hero: Fadnavis

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.