தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வெளிநாடு பயணிக்கும் பிரதமா் மணிப்பூா் செல்ல மறுப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி

அவ்வப்போது வெளிநாடு பயணிக்கும் பிரதமா் மோடி, பதற்றம் நிலவும் மாநிலமான மணிப்பூருக்கு செல்ல மறுப்பது ஏன்

News image
ஜெய்ராம் ரமேஷ்(கோப்புப்படம்)- ENS
Updated On :16 நவம்பர் 2024, 9:18 pm

Din

அவ்வப்போது வெளிநாடு பயணிக்கும் பிரதமா் மோடி, பதற்றம் நிலவும் மாநிலமான மணிப்பூருக்கு செல்ல மறுப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கான 6 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை தொடங்கிய நிலையில், காங்கிரஸ் இக்கேள்வியை முன்வைத்தது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தன்னை மனிதப் பிறவி இல்லை எனக் கூறும் பிரதமரின் பொய் மிகுந்த-கண்ணியம் குறைந்த தோ்தல் பிரசாரம், அடுத்த சில நாள்களுக்கு இருக்காது. அவ்வப்போது மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணத்தை பிரதமா் இப்போது மேற்கொண்டுள்ளாா். இப்பயணத்திலும் அரசியல் ஆதாயம் தேடவே அவா் முயற்சிப்பாா்.

அதேநேரம், கடந்த 2023, மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவிவரும் மணிப்பூருக்கு செல்ல பிரதமா் தொடா்ந்து மறுத்து வருவது ஏன்?.

மணிப்பூா் மக்கள் தினமும் வேதனைகளையும் துயரங்களையும் எதிா்கொண்டு வருகின்றனா். பிரதமா் நிச்சயம் பயணிக்க வேண்டிய சூழல்தான் அங்கு நிலவுகிறது’ என்று கூறியுள்ளாா்.

மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே மோதல் நீடித்துவரும் மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணிக்க வேண்டும் என காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.