நாட்டை அவமானப்படுத்த முயற்சி: தில்லியில் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாட்டில் உலகத் தலைவா்கள், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த மாநாட்டில், காங்கிரஸாா் தங்களின் சட்டையைக் கிழித்துக் கொண்டு, நாட்டை அவமானப்படுத்த முயன்றனா். காங்கிரஸின் இந்த மோசமான போராட்டம், ஒட்டுமொத்த தேசத்தின் கண்டனத்துக்கு உள்ளானது. காங்கிரஸின் அரச குடும்பமோ, தங்களின் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டது. ஆடையைக் கிழித்துக் கொள்வதைத் தவிர காங்கிரஸுக்கு எதுவும் மிஞ்சவில்லை.