

பெங்களூருவில் கார் தீப்பற்றி, தொழிலதிபர் பலியான சம்பவத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
பெங்களூருவின் முதீன்பால்யா அருகே கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாக, சனிக்கிழமையில் (நவ. 16) காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்தை அடைந்த காவல்துறையினர், தீப்பிடித்த காரை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அணைத்தனர். இருப்பினும், காரினுள் இருந்த நபர் மூச்சுத் திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.
தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் 42 வயதான தொழிலதிபர் பிரதீப் என்பது தெரிய வந்தது. மேலும், பிரதீப் தானே காருக்கு தீவைத்து எரித்து, தற்கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். காருக்குள் இருந்து தற்கொலைக் குறிப்புகள் எதுவும் கிடைக்காத நிலையிலும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: நோயாளியின் கண்ணைத் தின்ற எலி? மருத்துவர்கள் அலட்சியம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

வாகனங்கள் மீது இடிந்து விழுந்த மெட்ரோ கட்டுமானம்! ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

சொகுசு கார் விபத்து: தொழிலதிபர் மகன் கைது!

ராஞ்சியில் 6ஆவது மாடியில் இருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

