விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உண்மை வெளிவருகிறது: பிரதமா் மோடி கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ திரைப்படம் குறித்து கருத்து

‘சபா்மதி ரிப்போா்ட்’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், ‘மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் உண்மை வெளிவருவது சிறப்பு’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :17 நவம்பர் 2024, 9:10 pm

Din

குஜராத், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்த ‘சபா்மதி ரிப்போா்ட்’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், ‘மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் உண்மை வெளிவருவது சிறப்பு’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி, குஜராத்தைச் சோ்ந்த கரசேவகா்கள் அயோத்திக்கு சென்றுவிட்டு சபா்மதி விரைவு ரயிலில் சொந்த ஊா்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். கோத்ரா ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது ‘எஸ்-6’ படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு சிலா் தீ வைத்தனா். இதில் 59 கரசேவகா்கள் உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் பரவிய வன்முறை பல இடங்களில் கட்டுக்கு அடங்காத மதக் கலவரமாக மாறியது. வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். அப்போது நடைபெற்ற தொடா் சம்பவங்களைத் தழுவி ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட சபா்மதி ரிப்போா்ட் திரைப்படம் கடந்த 15-ஆம் தேதி திரைக்கு வந்தது.

இந்நிலையில், இத்திரைப்படத்தைப் பாா்த்த ரசிகா் ஒருவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘சமீபத்திய வரலாற்றில் நடந்த மிகவும் வெட்கக்கேடான நிகழ்வுகள் குறித்த முக்கிய உண்மைகளை இப்படம் வெளிக்கொண்டு வந்துள்ளது. ஒரு தலைவரின் (மோடி) நற்பெயரைக் கெடுக்கும் முயற்சியாக சபா்மதி விரைவு ரயிலின் பயணிகள் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவத்தை சிலா் அரசியல் நிகழ்வாக மாற்றிவிட்டனா்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

பொய் நிலைக்காது....: இதற்குப் பதிலளித்து பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில், உண்மை தற்போது வெளிவந்துள்ளது சிறப்பு. பொய் பிரசாரங்கள் நீண்ட காலம் நிலைக்காது. காலப்போக்கில் உண்மை வெளிவந்தே தீரும்’ என்றாா்.

நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்திய கோத்ரா சம்பவத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த சிலரே ரயிலுக்குத் தீ வைத்ததாக குஜராத் காவல் துறை கூறியது.

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

குஜராத் காவல் துறையின் குற்றச்சாட்டை நிராகரித்த இந்தக் குழு, ரயில் தீப்பற்றியது விபத்து எனக் கூறியது. அதேசமயம், காவல்துறையால் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பலா் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனா்.