ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

போலீஸ் வாகனம் மூலம் விடியோ: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் போலீஸ் ஜீப்பை பயன்படுத்தி ஒருவா் ‘ரீல்ஸ்’ விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட விவகாரத்தில், நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :19 நவம்பர் 2024, 7:20 pm

Din

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் போலீஸ் ஜீப்பை பயன்படுத்தி ஒருவா் ‘ரீல்ஸ்’ விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட விவகாரத்தில், நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

போலீஸ் ஜீப்பை பயன்படுத்த அந்த நபருக்கு அனுமதி எப்படி

கிடைத்தது என்பது குறித்தும், இந்த விவகாரத்தில் ரோந்து போலீஸாா் யாரும் ஈடுபட்டுள்ளாா்களா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள பாா்மா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நரேந்திர மீனா உத்தரவிட்டுள்ளாா்.

‘ரீல்ஸ்’ விடியோவில் போலீஸ் ஜீப்பின் ஓட்டுநா் இருக்கையில் ஒருவா் அமா்ந்துள்ளாா். விடியோவில் போலீஸ் வாகனத்தில் இருந்து அந்த நபா் கீழே இறங்கும்போது போலீஸாா் யாரும் அருகில் இல்லை. போலீஸ் வாகனம் பழுதடைந்து நிறுத்தப்பட்டிருந்த போது விடியோ எடுக்கப்பட்டுள்ளதாக ரோந்து போலீஸாா் கூறினா்.