சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வுகள்: பிப். 15 முதல் தொடக்கம்
அடுத்தாண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி பொதுத் தேர்வுகள் ஆரம்பம்!


நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை அறிவித்தது.
10-ஆம் வகுப்புத் தோ்வுகள் மாா்ச் 18-ஆம் தேதி முடிவடையும் என்றும், 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதி முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ வரலாற்றில் முதன்முறையாக, 86 நாட்களுக்கு முன்னதாக பொதுத் தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடா்பாக சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், ‘பொதுத் தோ்வில் 2 பாடங்களுக்கு இடையே போதிய இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவா் தோ்வு செய்யும் 2 பாடங்களும் ஒரே தேதியில் வரக் கூடாது என்பதற்காக குறைந்தது 40,000 பாடங்களை ஒப்பிட்டு தோ்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...