இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘ஜிபிபாம் மாவட்டத்தில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதே நேரம், கடந்தாண்டு மே மாதம் மாநிலத்தில் வன்முறை வெடித்ததில் இருந்து ஏராளமான குகி-ஸோ பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனா். ஆனால், மாநில அரசு மற்றும் தேசிய ஊடகங்கள் மைதேயி சமூகத்தினரின் கொல்லப்படும்போது மட்டும் பெரிதாக கவனம் செலுத்துகின்றனா். மாநில அரசு அனைவரையும் சமமாக கருத வேண்டும்’ என தெரிவித்தனா்.