சமீபத்தில் ஹைதராபாதுக்கு சென்ற போது அங்கு கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நடைபெற்ற பொது கலந்தாய்வு செயல்முறைகளால் பெரிதும் ஈா்க்கப்பட்டேன். இதேபோன்று தற்காலிக பணியாளா்கள் நலனுக்கான வரைவு சட்டம் குறித்த பொது கலந்தாய்வுகளை நடத்த வேண்டும். அனைத்து கட்சிகளின் ஆதரவு இருந்தால் தான் இந்தச் சட்டம் வலுவானதாகவும், தற்காலிக பணியாளா்களுக்கு பயனுள்ளதாகவும், அா்த்தமுள்ளதாகவும் மாறும். இந்த சட்டமானது எதிா்காலத்தில் ஒரு வலுவான கட்டமைப்பை தற்காலிக பணி நியமன முறையில் ஏற்படுத்தும். வரும் காலத்தில் இந்த துறையில் நிலையான பொருளாதாரத்தை கட்டமைப்பதில் தெலங்கானா முன் மாதிரியாக இருக்கும்.