தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஒடிஸா துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் உயிரிழப்பு: போலீஸ் காயம்

பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவா் கொல்லப்பட்ட நிலையில், போலீஸ் ஒருவரும் காயமடைந்தாா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 10:38 pm

Din

ஒடிஸா - சத்தீஸ்கா் எல்லைப் பகுதியில் உள்ள ஜினேலிகுடா வனப் பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவா் கொல்லப்பட்ட நிலையில், போலீஸ் ஒருவரும் காயமடைந்தாா்.

மால்கங்கிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த புதன்கிழமை இரவு போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிறகு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். தேடுதல் நடவடிக்கையில் மேலும் இரண்டு மாவோயிஸ்டுகளை போலீஸாா் கைது செய்தனா். துப்பாக்கிச்சூட்டின் போது காயமடைந்த காவலா் தமரு பட்நாயக், மால்கங்கிரி மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாவோயிஸ்ட் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.