நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பலுடன் மீன்பிடி படகு மோதல்: 2 மீனவர்கள் மாயம்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலுடன் மீன்பிடி படகு மோதியதில் 2 மீனவர்கள் மாயமானதாக அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Photo Credit: AFP

Published On :

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலுடன் மீன்பிடி படகு மோதியதில் 2 மீனவர்கள் மாயமானதாக அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கோவா கடற்கரையில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் மர்தோமா என்ற படகில் இந்திய மீனவர்கள் 13 பேர் வியாழக்கிழமை மாலை மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலுடன் மீன்பிடி படகு திடீரென மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் அப்படகு நீரில் மூழ்கியது.

உடனே ஆறு கப்பல்கள் மற்றும் விமான உதவியுடன் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் இதுவரை 11 பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மாயமான 2 மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு கடற்படை உத்தரவிட்டுள்ளது. இதனால் கோவா கடற்பரப்பில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.