வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்!

நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்திய மாலுமிகள் 11 பேர் கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்டது பற்றி...

News image

வர்த்தகக் கப்பல் - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 9:50 pm IST

நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்திய மாலுமிகள் 11 பேர் கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மார்ஷல் நாட்டின் கொடியேந்திய இந்திய வர்த்தகக் கப்பல் போதைப்பொருள் (கொக்கைன்) கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அந்தக் கப்பலுடன் சேர்த்து 11 இந்திய மாலுமிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.

ஆறு மாதங்களுக்கு முன்பு 31.5 கிலோகிராம் கொகைனை மார்ஷல் தீவுகளில் இருந்து நைஜீரியாவின் அபாபா துறைமுகம் வழியே லாகோஸ் நகருக்கு எடுத்துச்செல்ல முயற்சித்த கப்பலின் கேப்டனான ஷர்மா ஷாஷி பூஷன் உடன் சேர்த்து இந்திய மாலுமிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

நைஜீரியாவின் தேசிய போதைப்பொருள் சட்ட அமலாக்க முகமை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு, போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திய எம்வி அருணா ஹூல்யா கப்பலுக்கு 5.3 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 50 கோடி) அபராதம் விதித்து நைஜீரிய நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றவாளிகளில் 3 முக்கிய அதிகாரிகளுக்கு தலா ரூ.95 லட்சம் அபராதமும், மற்ற மாலுமிகளுக்கு தலா ரூ. 47.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதுபோக, அனைவரும் நைஜீரிய மதிப்பில் தலா ரூ. 7,000 அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொக்கைன் மற்றும் எந்தவொரு சட்டவிரோத கடத்தலுக்கும் இனி நைஜீரியா பாதுகாப்பான வழித்தடமாக இருக்காது என்ற வலுவான செய்தியை இந்தத் தீர்ப்பு வழங்கியிருப்பதாக நைஜீரிய போதைப்பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

Regarding the detention of 11 Indian sailors and their ship in Nigeria for drug trafficking

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.