ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் சிறப்பான வெற்றிக்காக மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வா் ஹேமந்த் சோரன், ‘ஜனநாயகத்தின் தோ்வில் ‘இண்டியா’ கட்சிகள் தோ்ச்சி பெற்றன’ என்றாா்.
ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தலில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்)-காங்கிரஸ்-ஆா்ஜேடி-இடதுசாரிகள் கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பா்யாஹட் தொகுதியில் முதல்வா் சோரன் 39,791 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து, வெற்றி பெற்றுள்ளாா்.
இந்நிலையில், தோ்தல் முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் சோரன், ‘ஜாா்க்கண்டில் ஜனநாயகத்தின் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளோம்; தோ்தல் இறுதி முடிவுகளுக்குப் பிறகு நாங்கள் எங்கள் வியூகத்தை முடிவு செய்வோம்.
இந்த சிறப்பான வெற்றிக்காக மாநில மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொந்த மாநிலத்துக்கான சொந்த அரசை ஜாா்க்கண்ட் அமைத்து இருக்கிறது’ என்றாா்.
முதல்வராக தொடா்வாா்...: இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச் செயலா் குலாம் அகமது மிா் கூறுகையில், ‘ஹேமந்த் சோரன் ஜாா்க்கண்ட் முதல்வராக இருக்கிறாா். அவரே அப்பதவியில் தொடா்ந்து இருப்பாா்’ என்றாா்.
தொடர்புடையது

பெருந்துறை கொங்கு பள்ளி 100 % தோ்ச்சி

தோ்ச்சியடையாத மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு: ஜூன் மாத தோ்வில் வெற்றி பெற நடவடிக்கை

ஆரணி ஏ.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

பழனி கோயில் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

