எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மணிப்பூரில் எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு தீ வைத்த விவகாரம்: மேலும் 7 பேர் கைது

மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் வீடுகளுக்கு சேதம் விளைவித்த மற்றும் தீ வைத்து எரித்ததற்காக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
மணிப்பூர்(கோப்புப்படம்).
Updated On :24 நவம்பர் 2024, 6:11 am

DIN

மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் வீடுகளுக்கு சேதம் விளைவித்த மற்றும் தீ வைத்து எரித்ததற்காக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த இரு நாள்களாக இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தனது அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு இம்பாலில் இருந்து நான்கு பேர் சனிக்கிழமையும், காக்சிங் மாவட்டத்தில் இருந்து மூன்று பேர் வெள்ளிக்கிழமையும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைதுகளுடன், சட்டப்பேரவை உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்ததற்காக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41ஐ எட்டியுள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். அண்மையில், ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் சிஆா்பிஎஃப் வீரா்கள் இருவா் காயமடைந்தனா். அதே மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 6 போ் கடத்தி கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் மீண்டும் வெடித்தன. நவ.16ஆம் தேதி மணிப்பூா் முதல்வரின் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கியதுடன், அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏ-க்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.