மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் 3 பேர் பலியாகினர், பலர் காயமுற்றனர்.
மணிப்பூர் மாநிலம், உக்ருல் மாவட்டத்தின் சில பகுதிகளில் குகி-நாகா சமூகத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய நபர்களிடையே சமீபகாலமாகத் தொடர்ச்சியான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பலர் பலியாகியுள்ளனர் மற்றும் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உக்ருல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரு சமூகத்தினரிடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
இதில் 3 பேர் பலியாகினர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். இரண்டு வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பலியானவர்களில் இருவர் குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மூன்றாவது நபர் தங்குல் நாகா சமூகத்தைச் சேர்ந்தவர். அதிகாலையில் முல்லம் மற்றும் ஷோங்ஃபால் ஆகிய குகி கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை குகி மனித உரிமைகள் அறக்கட்டளை கண்டித்துள்ளது.
அதேசமயம், முல்லம் கிராமத்தை தங்குல் நாகா தன்னார்வலர்கள் தாக்கினர் என்ற குற்றச்சாட்டை நாகா கிராமக் காவல் படை மறுத்துள்ளது. ரோந்துப் பணியின் போது குகி ஆயுதக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 29 வயது நாகா தன்னார்வலர் ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு பேர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்தே பதிலடி மோதல் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த 2023-இல் பெரும் கலவரம் வெடித்த நிலையில், இதுவரையிலான வன்முறைச் சம்பவங்களில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடுகளைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கானோா், அரசின் நிவாரண முகாம்களிலேயே தொடா்ந்து தங்கியுள்ளனா்.
சுமாா் ஓராண்டாக குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெற்ற மணிப்பூரில் முதல்வா் யும்நாம் கெம்சந்த் தலைமையிலான பாஜக அரசு கடந்த பிப்ரவரியில் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
The Naga Village Guard denied attacking Mullam village, saying its personnel were on patrol after attacks on Sinakeithei and Kuki cadre movement under SoO.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணிப்பூா்: பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவாா்த்தை தீவிரம்

குகி, நாகா சமூகங்களைச் சேர்ந்த 38 பேர் சிறைப்பிடிப்பு! - மணிப்பூர் அரசு அறிவிப்பு!
தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து: 9 பேர் பலி!

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி!
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை


