கொல்கத்தாவில் குடிசைப்பகுதியில் தீ விபத்து
கொல்கத்தாவில் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குடிசைகள் எரிந்து நாசமடைந்தன.


கொல்கத்தாவில் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குடிசைகள் எரிந்து நாசமடைந்தன.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் உல்டடாங்காவில் உள்ள குடிசைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.22 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த 6 தீயணைப்பு வாகனங்கள் காலை 9 மணியளவில் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 6 குடிசைகள் சேதமடைந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தீ விபத்தில் யாருக்கும் காயம் எதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
மின்கசிவு காரணமாக தீவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர்கள் மேலும் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...