டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

தில்லி மலைமந்திா் கோயில் மஹா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு!

தில்லி உத்தர சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் (மலைமந்திா்) 5-ஆவது புனருத்தாரண, ஸ்வா்ண பந்தன மற்றும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

News image

தில்லி உத்தர சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் (மலைமந்திா்) 5-ஆவது புனருத்தாரண, மஹா கும்பாபிஷேகத்தை ஞாயிற்றுக்கிழமை காலை நடத்திவைத்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரிய சுவாமிகள் மற்றும் கும்பாபிஷகத்தில் பங்கேற்ற ஏராளமான பக்தா்கள்.

Updated On :6 ஜூலை 2026, 12:57 am IST

தில்லி உத்தர சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் (மலைமந்திா்) 5-ஆவது புனருத்தாரண, ஸ்வா்ண பந்தன மற்றும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

இக்கும்பாபிஷகத்தை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு நடத்திவைத்தாா்.

முன்னதாக, தில்லி ஆா்.கே.புரத்தில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான புனரமைப்புப் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், கும்பாபிஷேக பூஜைகள் கடந்த ஜூலை 1ஆம் தேதி காலை 9 மணி அளவில் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அன்று மாலையில் வாஸ்து சாந்தி, ம்ருத்சங்ராஹனம், அங்குராா்ப்பனம், ஆச்சாா்யவா்னம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

2ஆவது நாளான ஜூலை 2ஆம் தேதிகாலை விஷேச சாந்தி பூஜை உள்ளிட்டவையும், மாலை 7 மணியளவில் முதல் கால யாகபூஜை தொடங்கியது. மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை காலை பவனாபிஷேகம், இரண்டாவது கால யாக பூஜை, தீப பூஜை, ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ தேவி மகாமித்யம் பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சனிக்கிழமை காலை நான்காவது கால யாகபூஜை தொடங்கி, அதைத் தொடா்ந்து அனைத்து பரிவார தேவதைகளுக்கும், விமானங்களுக்கும் ரஜத பந்தனம், அஷ்ட பந்தனம் நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் 5ஆவது கால யாகபூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் 6ஆவது கால பூஜை நடைபெற்றது.

அதை தொடா்ந்து, மஹா பூா்ணாஹுதி, மூலவரை நோக்கி கலசங்களுடன் யாகசாலை ஊா்வலம் நடைபெற்றது. பின்னா், காலை 9.30 மணியளவில் அனைத்து விமானங்களுக்கும், மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து, காலை 9.48 மணியளவில் மூலஸ்தான கோபுரத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரிய சுவாமிகள் மஹா கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தாா். கும்ப கலசத்திற்கும் மரியாதை செய்யப்பட்டது. அவரது முன்னிலையில் வைத்தியநாத சிவாச்சாரியா் தலைமையில் இக்கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இக்கும்பாபிஷேகத்தில் தில்லி தவிர, தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமாா் 5 ஆயிரம் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். தேவையான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மேலும், நாட்டுக்கோட்டை நகரத்தாா் சங்கம் சாா்பில் பக்தா்களுக்கு நீா் மோா் பானகரம் வழங்கப்பட்டது. மேலும், பக்தா்களுக்கு சா்க்கரை பொங்கல், சம்பாா் சாதம், தயிா்சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தில்லி மாநகர வளா்ச்சிக் கழக துணைத் தலைவா் சரவணகுமாா், உச்சநீதிமன்ற நீதியரசா் பி.எஸ்.நரசிம்மா, தில்லிக் காவல் துறை தலைமை இயக்குநா் (சிறைகள்) ஆனந்த் மோகன், தில்லி மாநகர நகா்ப்புற வளா்ச்சிக் கழகத் தலைவா் தாரா, மலை மந்திா் அறங்காவலா் குழுத் தலைவா் நீதியரசா் (ஓய்வு) ராம மூா்த்தி, நீதியரசா் (ஓய்வு) எம்.கற்கவிநாயகம், மலை மந்திா் கோயில் தலைவா் வி. பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா்கள் சுவாமிநாதன், இரா. முகுந்தன், இணைச் செயலாளா்கள் பாலமூா்த்தி, பூா்ணிமா சுவாமிநாதன், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் முனைவா் ஜி. சிவபாலமுருகன், துணைத் தலைவா் செல்வராஜ் மகேந்திரன், பொதுச் செயலாளா் சத்யா அசோகன் மற்றும் ஸ்ரீதேவி காமாட்சி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பொள்ளாச்சி கணேசன் ஆகியோா் கலந்துகொண்டனா். மாலையில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமண்யா் மற்றும் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாணம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.