முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

சபரிமலையில் 9 நாட்களுக்குள் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!

ஆண்டுதோறும் மகரவிளக்கு யாத்திரையை முன்னிட்டு, சரண கோஷங்களுக்கு மத்தியில், இந்தாண்டு சபரிமலை நடை திறக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :24 நவம்பர் 2024, 9:15 pm IST

ஆண்டுதோறும் மகரவிளக்கு யாத்திரையை முன்னிட்டு, சரண கோஷங்களுக்கு மத்தியில், இந்தாண்டு சபரிமலை நடை திறக்கப்பட்டது.

இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்ததாவது:

நவம்பர் 16 ஆம் தேதி கோயிலின் நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜை வழிபாடுகள் விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகின்ற நிலையில், இது வரையான ஒன்பது நாட்களுக்குள் 6,12,290 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3,03,501 பக்தர்களுடன் ஒப்பிடும் போது இது குறிப்பிடத்தக்க விதமாக அதிகரித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வருவாய் கணிசமாக உயர்ந்து ரூ.41.64 கோடியாக உள்ளது. இதுவே முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது ரூ.13.33 கோடி அதிகரித்துள்ளது.

பக்தர்களின் சுமூகமான தரிசனத்துக்கு வண்டிப்பெரியார் சத்திரம், எருமேலி மற்றும் பம்பா ஆகிய மூன்று இடங்களில் ஆன்லைன் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் பக்தர்களின் வருகையை சமாளிக்க பம்பா மணப்புரம் ஆன்லைன் புக்கிங் சென்டரில் விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தரிசனம் இல்லாமல் பக்தர்கள் திரும்ப வேண்டிய சூழ்நிலை இல்லை என்று உறுதியளித்த பிரசாந்த், அதிகரித்து வரும் யாத்ரீகர்களை நிர்வகிக்க ஆன்லைன் முன்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையின் நகலை முன்பதிவு மையத்துக்கு எடுத்து வருமாறும், சபரிமலையில் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பதன் மூலம் கோயிலின் சுற்றுச்சூழலுக்கும் யாத்ரீகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

இந்த வேளையில் தந்திரி கண்டரரு ராஜீவரு, பக்தர்கள் தங்கள் இருமுடிக்கட்டில் பிளாஸ்டிக்கை கலக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

புனித பம்பா நதியில் ஆடைகளை விட்டுச் செல்வது எந்தவொரு சடங்கின் ஒரு பகுதியும் அல்ல என்பதை வலியுறுத்திய பிரசாந்த், நதியை மாசுபடுத்துவதைத் தவிர்க்குமாறு பக்தர்களை வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.