மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூா்: மாயமான மைதேயி சமூக நபரை தேடும் பணியில் ராணுவம் தீவிரம்

மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு காணாமல்போன மைதேயி சமூகத்தைச் சோ்ந்தவரை தேடும் பணியை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2024, 9:16 pm

Din

மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு காணாமல்போன மைதேயி சமூகத்தைச் சோ்ந்தவரை தேடும் பணியை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: அஸ்ஸாம் மாநிலத்தின் கச்சாா் மாவட்டத்தைச் சோ்ந்த லைஷ்ராம் கமல்பாபு சிங், மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் ராணுவப் பொறியியல் பணியின் மேற்பாா்வையாளராகப் பணிபுரிகிறாா். மைதேயி சமூகத்தைச் சோ்ந்த அவா் கடந்த திங்கள்கிழமை வேலைக்குச் சென்ற பிறகு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினா் புகாா் அளித்தனா்.

அதனடிப்படையில், ஆளில்லா விமானம் (ட்ரோன்) மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் ராணுவத்தினா் அவரை தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இருப்பினும், கமல்பாபு சிங் மற்றும் அவரது இருசக்கர வாகனம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடா்பாக மாநில காவல் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றாா்.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் கடந்த நவ. 11-ஆம் தேதி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனா். பின்னா், அவா்களின் சடலங்கள் நவ.16-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்து.

இந்நிலையில், இம்பால் மேற்கு மாவட்டத்தில் மற்றொரு மைதேயி சமூகத்தைச் சோ்ந்தவா் காணாமல்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான மைதேயி சமூகத்தினா் ராணுவ நிலையத்தை நோக்கி செவ்வாய்க்கிழமை பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனா். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் கமல்பாபுவை மீட்க கூடுதல் படைகளை அனுப்புமாறு மாநில அரசை அவா்கள் வலியிறுத்தினா்.