டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

மணிப்பூரில் தொடரும் இணைய சேவை துண்டிப்பு!

மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்தது.

News image

ஜிரிபம் மாவட்டத்தில் கண்காணிப்புப் பணியில் வீரர்கள் - PTI

Updated On :27 நவம்பர் 2024, 6:28 pm IST

மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. நிலைமை கட்டுக்குள் வராததால், தற்போது மேலும் இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மணிப்பூரின் ஜிரிபம் உள்பட 9 மாவட்டங்களில் நவ. 29ஆம் தேதி வரை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மணிப்பூரில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து மதிப்பாய்வு செய்த பிறகு மேலும் இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிப்பை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், காக்சிங், பிஷ்னுபூர், தெளபால், சூரசந்த்பூர், கங்போக்பி, பெர்ஸாவல் மற்றும் ஜிரிபம் ஆகிய பகுதிகளில் அடுத்த இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நவ. 16ஆம் தேதி நேரிட்ட கலவரத்தைத் தொடர்ந்து மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.

சமூக விரோதிகள் சிலர் வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துகளைப் பகிர்வதால், சட்டம் - ஒழுங்கு சீர்கெடுவதைத் தவிர்க்கும் வகையில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போதுவரை மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

எனினும், பொதுமக்கள் வசதிக்காக மருத்துவ வசதிகள், கல்வி நிலையங்கள் மற்றும் இதர அரசு அலுவலகங்களில் மட்டும் இணைய சேவையை பயன்படுத்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.