மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம்: 1.2 லட்சம் வாய்ப்புகளுக்கு 6.2 லட்சம் விண்ணப்பங்கள்!

இத்திட்டத்தில் 500 நிறுவனங்களில், 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கப்படும்.

Published On :

பிரதமரின் தொழில் பழகுநர் (Internship) திட்டத்தில் 1.2 லட்சம் வாய்ப்புகளுக்கு 6.2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

2024 - 2025க்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 500 நிறுவனங்களில், 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கான இணையதளம் அக். 3 ஆம் தேதியில் தொடங்கப்பட்டு, அக். 12 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நிறுவனங்கள் இடுகையிட்ட 1.27 லட்சம் வாய்ப்புகளுக்கு அக். 12 - நவ. 15 வரையில் சுமார் 6.21 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 21 முதல் 24 வயதுடையவர்களில் 4.87 லட்சம் விண்ணப்பதாரர்களே தகுதியுடன் விண்ணப்பித்துள்ளனர். 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நவ. 20 வரையில் ரூ. 6.04 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், நவ. 30 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் நிறுவனங்களில் சேர வேண்டும்; அவர்களுக்கு ஒரு முறை மானியமாக ரூ. 6,000 வழங்கப்படும். நிறுவனத்தில் 12 மாத காலத்திற்கு பயிற்சி பெறும் வாய்ப்புடன், அவர்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ. 4,500 அரசும், ரூ. 500 அந்த நிறுவனமும் வழங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.