டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

வக்ஃப் மசோதா: கூட்டுக் குழு பதவிக் காலம் நீட்டிப்பு

வக்ஃப் மசோதா: கூட்டுக் குழு பதவிக் காலம் நீட்டிப்பு - மக்களவையில் தீா்மானம் நிறைவேற்றம்

News image

PTI

Updated On :29 நவம்பர் 2024, 2:56 am IST

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

குழுவின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான தீா்மானத்தை கூட்டுக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான ஜகதாம்பிகா பால் மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தாா். அந்தத் தீா்மானம் உறுப்பினா்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம், கூட்டுக் குழு தனது அறிக்கையை சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு (2025) பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குறிப்பிட்ட காலக் கெடுக்குள் நாடாளுமன்ற கூட்டுக் குழு மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்துவிடும் என்ற அடிப்படையில், தற்போது நடைபெற்று வரும் நடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் விவகாரங்களுக்கான பட்டியலில் வக்ஃப் மசோதாவும் இடம்பெற்றிருந்தது. தற்போது, கூட்டுக் குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதால், குளிா்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படாது என்பது உறுதியாகியுள்ளது.

கூட்டுக் குழு ஏன்?: நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் ‘வக்ஃப்’ சொத்துகளை, மாநிலங்கள் அளவில் வக்ஃப் வாரியங்கள் நிா்வகிக்கின்றன. இதில் சில மாற்றங்களைக் கொண்டுவரும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. முஸ்லிம்களின் நிலம், சொத்துகள், மத விவகாரங்களை நிா்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதைத் தொடா்ந்து, மசோதாவை ஆய்வு செய்ய ஜகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (நவ. 29) மக்களவையில் தாக்கல் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இந்தக் குழு கேட்டு வந்தது. கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தின்போது, ‘வரைவு வக்ஃப் மசோதா தயாா் எனவும், அன்றைய கூட்டமே கூட்டுக் குழுவின் கடைசி அமா்வு’ என்றும் ஜகதாம்பிகா பால் அறிவித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்களுக்கும் வரைவு மசோதா நகல் விநியோகிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த எதிா்க்கட்சி உறுப்பினா்கள், ‘வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை ஆராய கூடுதல் அவகாசம் தேவை என்பதால், நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினா்.

மேலும், இதுதொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை திங்கள்கிழமை சந்தித்து முறையிட்டனா்.

இந்நிலையில், கூட்டுக் குழுவின் கூட்டம் புதன்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, இந்த விவகாரம் தொடா்பான அறிக்கையைத் தயாரிப்பதில் குழுவின் தலைவா் அவசரம் காட்டுவதாக குற்றஞ்சாட்டிய எதிா்க்கட்சி உறுப்பினா்கள், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா். பின்னா், அவா்கள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றபோது, கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் வரை நீட்டிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதற்கு தற்போது மக்களவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.