டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆக்ரா பல்கலை.யில் நடந்த மிகப் பயங்கர தேர்வு மோசடி: வெளிச்சத்துக்கு வந்தது எப்படி

ஆக்ரா பல்கலை.யில் தேர்வு மோசடி வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?

News image
பிரதி படம் - Center-Center-Chennai
Updated On :29 நவம்பர் 2024, 6:37 am

DIN

ஆக்ரா: ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட மூன்று கல்லூரிகளில், நடந்து வரும் பருவத் தேர்வில் மிகப் பயங்கர மோசடி நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுமார் 2,000 இளைஞர்கள், பெண்கள் பெயரில் தேர்வுகாக விண்ணப்பத்து, மூன்று தனியார் கல்லூரிகள் சார்பாக தேர்வெழுதியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆக்ராவில் உள்ள மூன்று தனியார் கல்லூரிகளில் இந்த மோசடி நடந்திருப்பதாகவவும், இவை சுயநிதி கல்லூரிகள், இங்கு பெண்கள்தான் அதிகம் பயில்கிறார்கள், கல்லூரியே தேர்வு நடத்தி, கல்லூரி பேராசிரியர்களே இங்கு கண்காணிப்பாளர்களாகவும் செயல்படுவார்கள் என்பதே மோசடிக்கு முக்கிய காரணம்.

அதாவது, பல்கலையில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை விடவும் மூன்று வேளைகளில் நடந்த தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால், சந்தேகம் எழுந்து தேர்வு குறித்து விசாரிக்கப்பட்டது.

இதையடுத்தே, கல்லூரிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை பரிசோதித்தபோது, மோசடி நடந்தது தெரிய வந்தது. அதாவது, மாணவிகளுக்கு பதிலாக ஏராளமான இளைஞர்கள் அந்த தேர்வை எழுதியிருந்ததும், தேர்வறை முழுவதும் இளைஞர்களே இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, மூன்று கல்லூரிகளின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

பொதுவாக மோசடி என்றால், ஏதோ ஒரு சில மாணவர்கள் ஈடுபடுவார்கள். ஆனால், இங்கு கல்லூரி நிர்வாகமே மாணவிகளுக்குப் பதிலாக ஏதோ கூலி வேலைக்கு ஆள் எடுப்பது போல ஏராளமான இளைஞர்களை அழைத்துவந்து தேர்வெழுத வைத்திருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.