கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டிஜிபி மாநாட்டில் பங்கேற்க ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி!

அகில இந்திய டிஜிபி/ஐஜிபி மாநாட்டில் பங்கேற்க..

News image
பிரதமர் மோடி
Updated On :29 நவம்பர் 2024, 6:38 am

பிடிஐ

ஒடிசாவில் அகில இந்திய டிஜிபி/ஐஜிபி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.

ஒடிசாவில் டிஜிபி, ஐஜிபிக்கள் மாநாடு இன்று தொடங்குகின்றது. இந்த மாநாடு தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

அமித் ஷா முன்னதாக ஒடிசா மாநிலத் தலைநகருக்கு வருவார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடி பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தை மாலை 4.20 மணியளவில் சென்றடைவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சிக்காகச் செய்யப்பட்ட போக்குவரத்து ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு மேல் புவனேஸ்வர் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகார வரம்பில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி மாலை 4.20 மணிக்கு புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, விமான நிலையத்தில் நடைபெறும் பாராட்டு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள உள்ளார். பின்னர் மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார் மோடி.

மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை பாஜக அலுவலகத்தில் அவர் தலைமையில் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. பின்னர் மீண்டும் ஆளுநர் மாளிகையில் இரவு தங்கவுள்ளார்.

ஒடிசாவில் முதன்முறையாக நடைபெறும் அகில இந்திய டிஜிபி/ஐஜிபி மாநாட்டிற்காக சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாநிலச் செயலக லோக் சேவா பவனுக்கு பிரதமர் வருகைதர உள்ளார். நிகழ்ச்சிகளை முவுத்துவிட்டு மறுநாள் புது தில்லி புறப்படுகிறார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஒடிசா மாநிலத்துக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.