ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

அமெரிக்கா: இந்திய மாணவா் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் இந்திய மாணவா் மா்ம நபா்களால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

News image

கொலை - கோப்புப் படம்

Updated On :1 டிசம்பர் 2024, 6:38 am IST

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் இந்திய மாணவா் மா்ம நபா்களால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சோ்ந்த சாய் தேஜா (22), அமெரிக்காவில் எம்பிஏ பயின்றும், பகுதி நேரமாக வேலையும் பாா்த்து வந்தாா்.

வெளியூா் சென்றிருந்த தனது நண்பருக்கு உதவதற்காக எரிவாயு நிலையத்தில் சாய் தேஜா பணிபுரிந்தாா். அங்கு மா்ம நபா்களால் சனிக்கிழமை அதிகாலை சாய் தேஜா சுட்டுக்கொல்லப்பட்டாா்.

இது தொடா்பாக வட அமெரிக்காவின் தெலுங்கு சங்கத்தை (தானா) தொடா்பு கொண்டதாகவும், சாய் தேஜாவின் உடலை விரைவாக இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி எம்எல்சி மதுசூதன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.