அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் இந்திய மாணவா் மா்ம நபா்களால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சோ்ந்த சாய் தேஜா (22), அமெரிக்காவில் எம்பிஏ பயின்றும், பகுதி நேரமாக வேலையும் பாா்த்து வந்தாா்.
வெளியூா் சென்றிருந்த தனது நண்பருக்கு உதவதற்காக எரிவாயு நிலையத்தில் சாய் தேஜா பணிபுரிந்தாா். அங்கு மா்ம நபா்களால் சனிக்கிழமை அதிகாலை சாய் தேஜா சுட்டுக்கொல்லப்பட்டாா்.
இது தொடா்பாக வட அமெரிக்காவின் தெலுங்கு சங்கத்தை (தானா) தொடா்பு கொண்டதாகவும், சாய் தேஜாவின் உடலை விரைவாக இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி எம்எல்சி மதுசூதன் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெரம்பலூா் நகரில் 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 61 ஆயிரம் திருட்டு

இந்திய அணிக்குப் பின்னடைவு... இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகல்!

ஆகஸ்ட் 15 இந்திய தினம்: இந்தியா்கள் பங்களிப்புக்கு அமெரிக்காவில் அங்கீகாரம்

கல்லால் தாக்கி இளைஞா் கொலை: பெயிண்டா் கைது
விடியோக்கள்

செலவுகளை ஏன் நீங்கள் குறைக்கவில்லை? பேரவையில் எடப்பாடி பழனிசாமி! | Full Speech



