இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மேற்கு வங்கம்: ஜேசிபி மோதி சிறுவன் பலி! போராட்டக்காரர்களைத் தாக்கிய திரிணமூல் கட்சியினர்!

மோசமான சாலையால்தான் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

News image
கோப்புப் படம்
Updated On :2 அக்டோபர் 2024, 1:31 pm

DIN

மேற்கு வங்கத்தில் ஜேசிபி மோதி சிறுவன் பலியான சம்பவத்தில் போராட்டக்காரர்களை திரிணமூல் கட்சியினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெற்கு கொல்கத்தாவின் பன்ஸ்ட்ரோனி பகுதியில் புதன்கிழமை (அக். 2) காலையில் டியூஷன் சென்று கொண்டிருந்த 9 ஆம் வகுப்பு மாணவர் மீது ஜேசிபி வாகனம் மோதியது. இதனையடுத்து, சிறுவனை அப்பகுதி மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இருந்தபோதிலும், செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய ஜேசிபியின் ஓட்டுநர், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்; அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தின் காரணங்களாக சாலையின் மோசமான நிலை, தாமதமாகும் புனரமைப்பு பணி, காவல்துறையினரின் அலட்சியம் முதலானவைதான் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சிறுவனின் உயிரிழப்புக்கு அரசின் அலட்சியக் கொலை என்று பெயரிட்டதுடன், அப்பகுதியின் கவுன்சிலர், எம்.எல்.ஏ.வையும் நேரில் வருமாறு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

கைகலப்பாக மாறிய இந்த போராட்டத்தின்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாகவும், பெண் ஒருவரை காவல் அதிகாரி கீழே தள்ளிவிட்டதில், பெண் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, நிலத்தடி வடிகால் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதால்தான், சாலையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் முடிக்கப்படும் என்று கவுன்சிலர் அனிதா கர் மஜும்தர் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடப்பதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.