சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பாஜகவால் பரப்பப்படும் கொடூர நோய்.. இளைஞர்கள் பாதிப்பு: எதைச் சொல்கிறார் ராகுல்?

பாஜகவால் பரப்பப்படும் கொடூர நோயால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக ராகுல் பேச்சு

News image
ராகுல் காந்தி- ANI
Updated On :4 அக்டோபர் 2024, 7:19 am

DIN

வேலையில்லாத் திண்டாட்டம் எனப்படும் கொடூரமான நோயை பாஜக பரப்பி வருவதாகவும், இதனால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியிருக்கிறார.

ஹரியாணாவில், பாஜகவால் பரப்பப்பட்டு வரும் வேலையில்லா திண்டாட்டம் எனும் நோய், மாநிலத்தின் பாதுகாப்பையும், மாநில இளைஞர்களின் எதிர்காலத்தையும் அபாயத்துக்கு இட்டுச்செல்வதாக கூறியிருக்கும் ராகுல், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வேலையில்லாத் திண்டாட்டத்தை முற்றிலும் ஒழித்து, ஒவ்வொரு குடும்பத்தின் வளமான வாழ்க்கைக்கு உறுதி அளிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், ராகுல் மேற்கொண்ட விஜய் சங்கல்ப் யாத்திரையின்போது, பெண்களுடன் அவர் உரையாடிய விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ராகுல், பாஜகாவால் பரப்பப்படும் வேலையில்லா திண்டாட்டம் என்ற நோயால் ஹரியாணாவின் வேர்கள், மாநில பாதுகாப்பு, இளைஞர்களின் எதிர்காலம் அபாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் சங்கல்ப யாத்திரையின்போது, சகோதரிகள் சிலர் எனக்கு ஓய்வெடுக்க இடமளித்து, வீட்டில் செய்த ரோட்டிகளை சாப்பிடக் கொடுத்தனர். அவர்கள்தான் மாநிலத்தில் இருக்கும் பிரச்னைகளை எனக்கு விளக்கமாகக் கூறினார்கள் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

சிறு வணிகங்களின் முதுகெலும்பை ஜிஎஸ்டி என்ற பெயரில் உடைத்துவிட்டது பாஜக, ராணுவத்துக்குத் தயாராகி வந்த இளைஞர்களின் கனவை நசுக்கிவிட்டது, விவசாயம் செய்ய நினைத்திருந்த இளைஞர்களின் எண்ணத்தை, வேளாண் சட்டங்களை கொண்டுவந்து இல்லாமல் செய்துவிட்டது என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.