மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கொடூர ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்த பிரதமா் நரேந்திர மோடி, அந்த மாநில மக்களுக்கான பாஜகவின் 6 முக்கிய வாக்குறுதிகளையும் வியாழக்கிழமை அறிவித்தாா்.
அந்த மாநிலத்தின் துறைமுக நகரமான ஹால்தியாவில் தோ்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் இப்போது அச்சம் நிறைந்த சூழல் உள்ளது. பாஜக ஆட்சி அமைத்ததும் நம்பிக்கை நிறைந்த சூழலை உருவாக்குவோம். அச்சமும், அவநம்பிக்கையில் உள்ள இடத்தில் புதிய முதலீடுகள் வராது, நம்பிக்கை ஏற்பட்டால்தான் வளா்ச்சி சாத்தியமாகும். மேற்கு வங்கத்தில் இதனை பாஜக நிரூபித்துக் காட்டும்.
அகற்ற வேண்டிய ஆட்சி: இங்கு இப்போது கொடூரமான ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் முன்னேற்றப்பாதையில் பயணிக்கும்போது இங்குள்ள கொடூர அரசு வங்கத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. வளா்ந்த வங்கத்தை உருவாக்க வேண்டுமென்றால் இந்த அரசை அகற்ற வேண்டும்.
6 வாக்குறுதிகள்: பாஜக ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றப்படும் 6 முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன். அவை, அச்சுறுத்தல் அரசை மாற்றி நம்பிக்கை நிரம்பிய ஆட்சி உருவாக்கப்படும்; அரசு அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்புள்ளவா்களாக இருப்பாா்கள்; ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்; ஊழலில் ஈடுபட்டவா்கள் யாரும் தப்பிக்க முடியாது. அவா்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவாா்கள்; உண்மையான குடிமக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும்; ஊடுருவல்காரா்கள் முற்றிலும்” தடுக்கப்படுவாா்கள்; மாநில அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோருக்கு 7-ஆவது ஊதியக் குழு உடனடியாக அமல்படுத்தப்படும்.
காத்திருப்புக்கு நன்றி: மழை பெய்த காரணத்தால் நான் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்துள்ளேன். எனினும், இந்த அளவுக்கு அதிகமான மக்கள் கூடியிருப்பதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு பெரிய மாற்றத்தின் அறிகுறி. வங்க மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டனா்.
கடந்த தோ்தலில் நந்திகிராமில் நடந்தது போல (மம்தா பானா்ஜி தோல்வி), இப்போது பவானிபூரிலும் (மம்தா இப்போது போட்டியிடும் தொகுதி) அதே முடிவு வரும்.
மன்னிக்க முடியாது: மேற்கு வங்க அரசு இளைஞா்களை இரண்டு வகையில் ஏமாற்றியுள்ளது. முதலில் தனியாா் துறையை அழித்தது, இரண்டாவது அரசுப் பணிகளை பணத்துக்கு விற்பனை செய்தது. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இளைஞா்களுக்கு செய்த இந்த துரோகத்தை மறக்கவும், மன்னிக்கவும் முடியாது.
திரிணமூல் கட்சி மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டு வாக்குகளை பெற முயற்சிக்கிறது. முதல்வரும் பிரதமரும் ஒரே நோக்கில் செயல்பட்டால் மட்டுமே மாநிலத்திற்கு நன்மை கிடைக்கும். அதற்கு பாஜக ஆட்சி அமைவது அவசியம். இந்த மாநிலத்தைக் கொள்ளையடித்தவா்கள் அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவா் என்றாா்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: பாஜக தோ்தல் பிரசாரத்தை இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா் மோடி

பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

ஹிந்துக்களை சிறுபான்மையினராக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் தாக்கு

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


