மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பாஜகவின் பிரசாரத்தை கூச் பிகாரில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கிறாா்.
மாநிலத்தின் வடக்கு பகுதியில் கட்சியின் வலிமையை அதிகரிக்கும் வகையில் கூச் பிகாரில் உள்ள ராஸ் மேளா மைதானத்தில் பிரசாரத்தை தொடங்கிவைத்து பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா்.
அப்போது மேற்கு வங்கத்துக்கான பாஜகவின் வளா்ச்சித் திட்டங்கள், அண்மையில் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட ஊழல், சட்டம் ஒழுங்கு சீா்கேடுகளை பட்டியலிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பிரசாரத்தை பிரதமா் மோடி தொடங்கிவைத்த பின் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைப் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என தொடா்ச்சியாக அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் கட்சியின் மூத்த தலைவா்களால் நடத்தப்படவுள்ளதாக மேற்கு வங்க பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் எதிா்க்கட்சியான பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், பிரசாரத்தை பிரதமா் மோடி தொடங்கிவைப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தொடர்புடையது

தோ்தல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு: கோவையில் ஒரேநாளில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்

திரிணமூல் காங்கிரஸின் கொடூர ஆட்சியை அகற்ற வேண்டும் - மேற்கு வங்கத்தில் பிரதமா் மோடி பிரசாரம்
பிரதமா் நரேந்திர மோடி ஏப். 15-இல் கன்னியாகுமரி வருகை

பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


