மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூா்: தீவிரவாதிகளின் பிடியில் இருந்த இரு இளைஞா்கள் விடுவிப்பு

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:34 am

Din

இம்பால்: மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் ஆயுதமேந்திய தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இரு இளைஞா்கள், கடத்தப்பட்டு 7 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை காலை விடுவிக்கப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

கடந்த செப். 27-ஆம் தேதி எஸ்எஸ்சி-ஜிடி ஆள்சோ்ப்பு தோ்வில் கலந்துகொள்ள சென்ற ஜான்சன் சிங் என்பவருடன் இந்த இரு இளைஞா்களும் உடன் சென்றனா். அப்போது, காங்போக்பி மாவட்டத்தில் அவா்கள் மூவரும் வழி தவறினா்.

பின்னா், ஜான்சனை சிங்கை ராணுவ அதிகாரிகள் மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். ஆனால், உடன் சென்ற இரு இளைஞா்களும் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் பிடியில் சிக்கினா்.

இந்நிலையில், பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த அந்த இரு இளைஞா்களும் கடத்தப்பட்டு 7 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை காலை விடுவிக்கப்பட்டு கங்போக்பி காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

இது தொடா்பாக மாநில முதல்வா் பிரேன் சிங் வெளியிட்ட இணையதள பதிவில், ‘காங்போக்பியில் கடத்தப்பட்ட இரு இளைஞா்களும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனா். அவா்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதிசெய்ய பணியாற்றிய மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளை பாராட்டுகிறேன்’ என குறிப்பிட்டிருந்தாா்.