தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

மும்பையில் சுரங்க மெட்ரோ ரயில் சேவை: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

முதல் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

News image

மெட்ரோ ரயில் சேவை

Updated On :4 அக்டோபர் 2024, 9:47 am

மும்பையில் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை(அக். 5) கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.

நவராத்திரி பரிசாக பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் - ஆரே ஜேவிஎல்ஆர் பிரிவு இடையே நகரின் முதல் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை நாளை முதல் தொடங்க உள்ளது.

மும்பை மெட்ரோ நிர்வாகம் சார்பில் கஃபே பரேடில் இருந்து ஆரே வரை மூன்று கட்டங்களாக மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்ட மெட்ரோ வழித்தடத்தில் (ஆரே முதல் பிகேசி) பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், நவராத்திரி பரிசாக ரூ.14.120 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை கொடியசைத்துத் தொடங்கிவைத்து, ரயிலில் பயணம் செய்ய உள்ளார்.

திங்கள்கிழமை முதல் ரயில் சேவைகள் தொடங்க உள்ளது. காலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும், நெரிசல் நேரங்களில் சுமார் ஆறு நிமிட இடைவெளியிலும், நெரிசல் இல்லாத நேரத்தில் 15-20 நிமிட இடைவெளியிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் இரவு 10.30 வரை சேவைகள் இயக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.