மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜெகதாம்பிகை கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

வாஷிமில் உள்ள ஜெகதாம்பிகை கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார்.

News image
ஜெகதாம்பிகை கோயிலில் பிரதமர் மோடி
Updated On :5 அக்டோபர் 2024, 7:24 am

பிடிஐ

மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள ஜெகதாம்பிகை கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.5) வழிபாடு மேற்கொண்டார்.

மும்பையில் சுரங்க மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரம் வந்துள்ளார்.

இன்று காலை நான்டெட் விமான நிலையத்திற்கு வந்த பிரதமரை, பாஜக தலைவர் அசோக் சவான் வரவேற்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் போஹராதேவிக்குச் சென்றார்.

பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக மகாராஷ்டிரம் வந்துள்ளார். வாஷிமில் உள்ள ஜெகதாம்பிகை கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்டார்.

பின்னர், போஹராதேவியில் உள்ள சந்த் செவலால் மகாராஜா மற்றும் சந்த் ராம்ராவ் மகாராஜா ஆகியோரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும், வாஷிமில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களையும், அதைத்தொடர்ந்து தாணேவில் பல்வேறு திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார்.

மும்பையில் ஆரே - பிகேசி இடையே 3வது கட்ட மெட்ரோ ரயில் சேவை திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார். பிகேசியில் இருந்து சாந்தாகுருஸ் வரை சென்று மீண்டும் பிகேசிக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய உள்ளார்.

பிரதமர் வருகையையொட்டி, மும்பை, தாணேவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.